கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்தை முன்னிட்டு கேரளாவில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாள் போராட்டமான நேற்று கேரளாவில் பேருந்துகள் எதுவும் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2 ஆம் நாள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் இயங்காததுடன், கடைகள் தோறும் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் ஆள் அறவம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இரண்டாவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!