ஜல்லிக்கட்டு முன்பதிவின் போது தள்ளுமுள்ளு- பரபரப்பு

 

திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு திருவிழாவில் மாடுகள் பங்கேற்க முன்பதிவு செய்வதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தர்ராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அதிகளவில் கூடியதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தின் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!