மது போதையில் அதிவேகமாக காரை இயக்கியதால் ஏற்ப்பட்ட அவலம்

மதுபோதையில் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கார் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் பாலமுருகன்-27, அருண்குமார்-29, ஜெயக்குமார்-26 மற்றும் விஜய்-24 இவர்கள் நான்கு பேரும் நள்ளிரவு நண்பனின் திருமண நிகழ்ச்சிக்கு மதுரையிலிருந்து தொண்டிக்கு காரில் சென்றுள்ளனர்.

காரை அருண்குமார் ஓட்டிய நிலையில், அவர் மற்றும் காரிலிருந்து அனைவருமே அதிக மதுபோதையில் இருந்துள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி அருகே வேந்தோணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் காரை கட்டுப்படுத்த முடியாமல் சென்டர் மீடியனில் மோதி சென்டர் மீடியனில் இருந்த கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மது போதையில் அதிவேகமாக காரை இயக்கியதில் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி  இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!