மாணவியை மதம் மாற்ற முயன்ற ஆசிரியைகள் மீது நடவடிக்கை

திருப்பூரில் மாணவியை மதம் மாற்ற முயன்ற ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியை, ஆசிரியா்கள் இருவர், திருநீறு வைக்க கூடாது எனவும் இயேசுநாதரை மட்டும் தான் வணங்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து இளைஞர் முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பள்ளிக்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், மதமாற்றம் செய்ய வற்புறுத்திய ஆசிரியைகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

 

Translate »
error: Content is protected !!