பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் கனமழை காரணமாக மண்சரிவு

 

பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. சாலையை சீரமைக்கும்‌ பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதன்காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 4-வது கொண்டைஊசிவளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு நள்ளிரவில் ஏற்பட்டதால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சாலையை சீரமைத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்தனர். மேலும், தொடர்ந்து மணிசரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!