விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு 164 போ் உயிா் தப்பினா்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்கு அதிகாலை 1:10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1:10 மணிக்கு பாங்காக் விமானத்தில் செல்ல   பாதுகாப்பு சோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்து கொண்டு 158 பயணிகள்விமானத்தில் ஏறினர்.  அதேபோல் விமான ஊழியர்கள் 8 பேரும் விமானத்தில் ஏறிக்கொண்டனா். 164 பேருடன் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்கியது.

அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் வானில் பறக்க தொடங்கினால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி ஓடுபாதையில் நிறுத்தினார். பின்னர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணியில் விமானப் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

விமானம் காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். அதன் பின்பு 8:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர். ஆனால் விமானம் இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 158 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விமானம் பழுது பார்த்து மதியத்திற்கு மேல் புறப்பட்டுச் செல்லும் என்று அதிகாரிக்ள் தெரிவித்தனர். இதையடுத்துபயணிக ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டு பிடித்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, 164 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Translate »
error: Content is protected !!