கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 67 நபர்களுக்கும், காரைக்காலில் 21 நபர்களுக்கும், ஏனாமில் 11 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 101 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 452 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,64,312 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,726 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது..

Translate »
error: Content is protected !!