தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுக விழா

தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழா தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருமதி அர்ச்சனா ஜெயின் குத்து விளக்கை ஏற்றி வைத்தார். அமைப்பின் கலாச்சார பிரிவு ஆலோசகர் டாக்டர் ரஜினி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி நிறுவனர் அதுல் குமார் மிஷ்ரா ஜி் சிறப்புரை ஆற்றினார். மாநில தலைவர் சுந்தர் ராஜ் நன்றி கூறினார். விழா ஏற்ப்பாடு
மாநில துணைதலைவர் ஆர்.என்.மகேஷ்குமார் செய்து இருந்தார். தொகுப்பாளர் சங்கீதா நிகழ்ச்சிகளை. தொகுத்து வழங்கினார். முன்னதாக கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். நிர்வாகிகளுக்கு் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்நாடு் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ,தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டர்.

Translate »
error: Content is protected !!