தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து – 3 பேர் பலி

தாய்லாந்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். பாங்காக்கின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சோன்புரி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு இந்த விடுதியின் ஒரு பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விடுதி முழுவதும் பரவியுள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் அங்கிருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இதில் 13 பேர் சடலமாகவும், மேலும் 35 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!