நியாயவிலை கடையில் தீ விபத்து

மதுரை, சின்ன உலகாணி கிராமத்தில் பூட்டப்பட்டிருந்த நியாயவிலை கடையில் இருந்து திடீரென புகை வந்தது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது கடைக்குள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதில் 2,500க்கும் மேற்பட்ட சாக்குகளும், 100க்கும் மேற்பட்ட இலவச வேட்டி-சேலைகளும் தீயில் கருகின. இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!