நடிகை மீரா மிதுன் தலைமறைவு

நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார் என சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்துள்ளது.

நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திரைப்படத் துறையில் பட்டியலின, பழங்குடியினர் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார்

சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுனும் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது

வழக்கு விசாரணை செப்டம்பர் 14 தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!