பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டிடத்திற்கு சீல்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கிணங்க விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல்.
திருச்சி தெப்பக்குளம் நந்தி கோவில் தெருவில், மாநகராட்சி விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட பாலக்கரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில்,பஞ்சாப் நேஷனல் வங்கி, சிவம் ரெடிமேட்ஸ், திருமலை கோல்ட் கவரிங் உள்ளிட்ட வங்கி மற்றும் கடைகள் இயங்கிவந்தன.

இந்த கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்களை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி அல்லூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Translate »
error: Content is protected !!