மும்பை , புனே உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்

மும்பை , புனே உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்

மும்பை , புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 15 நாட்களுக்கு  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் உணவகங்கள், மதுக்கடைகள் போன்றவை இரவு 11 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கமான ஆண்டாக இல்லை என்பதால் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இங்கிலாந்தில் இருந்து வரும் 5 விமானங்களில் வரும் பயணிகள் நிறுவன ரீதியாக தனிமைப்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Translate »
error: Content is protected !!