திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை – மு.க.அழகிரி

வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்று மு..அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு..அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது , எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். கட்சி தொடங்கும்படி ஆதரவாளர்கள் கூறினால், கட்சி தொடங்குவேன்

ரஜினிகாந்த் சென்னை வந்தவுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ரஜினியை நேரில் சந்திப்பேன்தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அழகிரி, திமுகவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!