தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் – கே.என் நேரு பேட்டி

தமிழகத்தில் பா..கவின் திட்டம் எடுபடாதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்  – திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பேட்டி

திருச்சி

எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்இதில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மேடையில் பேசுகையில்…  வீடு கட்டும் திட்டம், சாலை,பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். வரும் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட நானும் விண்ணப்பிக்க உள்ளேன் –  தலைவர் அனுமதித்தால் போட்டியிடுவேன்.

அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமாக ஊழல் புகாரை நாங்கள் தெரிவித்தால்,புகாருக்கு விளக்கம் தராமல் எங்கள் தலைவர் மீது தனிநபர் விமர்சனம் செய்கிறார்கள். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 2,500 வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித் தொகை வாங்குபவர்களுக்கு 2,500 வழங்கப்படவில்லை. சர்க்கரை கார்ட்டை அரிசி கார்டாக மாற்றி,பணத்தை அதிமுகவினரே எடுத்துக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என்.நேரு : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்தும்,அவர்கள் எந்ததெந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும்  திமுக தலைவர் முடிவு செய்து அறிவிப்பார் என பேட்டியளித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டாஸ்மாக் பேச்சு குறித்த கேள்விக்குபாவம், வயசானவர். இப்படித்தான் பேசிட்டு இருக்கார். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்லாமல், எங்களுக்கு பட்டப்பெயர் வைப்பதால் என்ன பயன்? குற்றச்சாட்டை அவர்கள்  ஒத்துக்கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தையும் தமிழ்நாட்டையும் பா.. குறி வைத்துள்ளது.

எப்படி இருந்தாலும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். மூன்றாவது அணி அமைந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது,மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். என பேசினார். தொடர்ந்த கிராமசபை கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கையாக  k.n நேருவிடம் முன்வைத்தனர்

Translate »
error: Content is protected !!