கர்நாடகாவில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்து 8 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்திருக்கிறது.

நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு ஒரு லாரி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ரெயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது.

இதில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்து வெடித்தும் சிதறின. லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது. மேலும் லாரி டிரைவர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். டிரைவர் உள்பட 8-க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 6 பேரின் உடல்களை கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உள்பட வேறு எந்த தகவல்களும் உடனடியாக கிடைக்கவில்லை. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தில் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹூன்சூரில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு லாரியில் வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றபோது நேற்றிரவு திடீரென லாரி வெடித்து விபத்துக்ககுள்ளானது. இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் கூறினார்.

விபத்து நடந்த பகுதி மட்டுமின்றி, தாவணகரே, உத்தர கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் பயங்கர சத்தமும், நில அதிர்வும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்சிவமொக்கா உயிர் இழப்பால் வலி மற்றும் துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்குகிறது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!