குஜராத் மாநிலத்தில் ஓட்டலுக்குள் புகுந்த சிங்கம்…..வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் சொகுசு விடுதியின் ஓட்டலுக்குள் சிங்கம் ஒன்று வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளதுஜூனாகத் நகரின் மையப்பகுதியில் ஓட்டலுடன் இணைந்த தனியார் சொகுசு விடுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் ஒன்று ஓட்டலுக்குள் கதவுகளை தாண்டி உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளது. அந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

பொதுவாக வனவிலங்குகள் பாதை மாறியோ அல்லது பசிக்காகவோ ஊருக்குள் வருவது அவ்வப்போது  நடந்து வருவதுதான். ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு வனத்துறை உடன்நடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.

 

Translate »
error: Content is protected !!