மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு

 

விவசாயிகள் போராட்டம் மற்றும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

டெல்லி-பஞ்சாப் எல்லையான சிங்கு-வில் சம்யூக்த் கிஷான் மோர்ச்சா தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிங்கு காஷிபூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொள்வது தொடர்பாகவும், விவசாயிகளுடைய இதர கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவே விவசாயிகளுடைய கோரிக்கைகளை மத்திய அரசுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டம் மற்றும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!