தெலுங்கானாவின் சட்ட விரோதமாக தங்கியிருந்த 40 பேர் கொண்ட கும்பல் கைது

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விசா காலாவதியான பின்பும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக மொத்தம் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆப்பிரிக்கா, சோமாலியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தெலுங்கு பாடல்களை பாடி பிரபலமடைந்த நைஜீரிய கலைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சோதனையில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!