சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க நடவடிக்கை- அமைச்சர் தகவல்

கொரோனா காலத்தில் பாதிப்படைந்த சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க தொழில் முனைவோரை அழைத்து குறைகளை கேட்டறிந்தோம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு அலுவலகத்தில் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களுக்கு மற்றும் கிளை மேலாளர்களுக்கு 15 மாவட்டங்களில் 15 ஜீப்புகள் ஒரு கோடியே 25 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் மும்பை பங்குச் சந்தை புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் 4 நபருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கி உள்ளதாகவும், இந்த துறையை வேகமாக செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!