உக்ரைன் தூதரகத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை

ரஷ்யா – உக்ரைன், போர் பதற்றத்திற்கு இடையே, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்யாவுடன் தூதரக ரீதியில் உறவு வைத்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்கள் உடனடியாக தங்களது விவரங்களை, அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர்ப்பதற்ற சூழலில், இந்தியாவின் இந்த பங்களிப்பு வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!