இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 26 பேர் கைது: இலங்கை கடற்படை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் வடக்கு கடல் பகுதியான வெத்தலகேர்ணி பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு தட்டிச் செல்ல முயன்றதாக 5 படகு ஓட்டுநர்கள் உட்பட 26 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் கைது செய்யப்பட்ட 26 நபர்களை யாழ்ப்பாணம் மருதங்கேணி போலீசாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!