தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 117 பயணிகள் மற்றும்  6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 123 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட 1 பிறகு பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விமானி திறமையாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால் யாருக்கும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர். பின், 123 பயணிகள் அந்தமானுக்கு மாற்று விமானத்தில் புறப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!