உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது

இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தொடங்கியிருக்கும் நிலையில், அந்நாட்டின் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனின் கீவ் நகரை நெருங்கி கொண்டிருந்த போது மோசமான வான் தாக்குதல் தொடர்வதால் உக்ரைன் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமானம் திரும்பியது. இதனால் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!