விவசாயியை ஏமாற்ற நினைக்கும் ஆலம்பூண்டி எஸ் பி ஐ வங்கி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலிப்பட்ட கிராமத்தில் வசித்து வரும் வேலு என்பவர் எஸ்பிஐ வங்கியின் மூலம் தன்னுடைய நிலத்தின் பத்திரத்தை வைத்து டிராக்டர் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு கட்டவேண்டிய பணத்தை முழுவதும் செலுத்தி முடித்த பிறகும் நிலத்தின் பத்திரத்தை திருப்பி தராமல் ஆலம்பூண்டி எஸ் பி ஐ வங்கி அதிகாரிகள் ஏமாற்றி வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.

பணம் கட்டியதற்கான அனைத்து ஆவணங்களும் தன் இடத்தில் சரியான முறையில் வைத்துள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளே முழுவதும் கட்டியதற்கான செட்டில்மெண்ட் ஆவணமும் கொடுத்துள்ளனர்.

அப்படி இருந்தும் தன்னுடைய நிலத்தின் பத்திரத்தை ஒன்றரை வருட காலமாக திருப்பித் தராமல் இழுத்தடித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார் இதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!