பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் 28ம் நாள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ம் நாள் தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் வருகிற 28-ம் நாள் டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த ஒன்றிய அமைச்சர்கள், ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!