அலிகார் பல்கலைகழகத்தில் வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஷர்ஜில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், டெல்லி போலீசார் பதிவு செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷர்ஜீல் தொடர்ந்து திகார் சிறையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.