ஆந்திரா: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் தெம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!