தேவர் சிலைக்கு பிரச்சார வாகனத்தில் வந்து ஓபிஎஸ் மாலை அணிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் துவங்கின.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பிரம்மாண்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

பின்னர் மதுரை தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.

கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஓ பன்னீர் செல்வத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

Translate »
error: Content is protected !!