அசாம்: தேசிய நெடுஞ்சாலையில் லாரி நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

அசாம் மாநிலம் திரிபுரா எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேகமாக வந்த லாரி எதிரே வந்த ஆட்டோ ரிக்‌ஷா மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் சத் பூஜைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்களை போலீசார் கரீம்கஞ்ச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!