ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் சட்டமன்றம்

 

ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற போது சுமார் 40 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்ததாகவும், எனவே சட்டமன்றம் கலைவாணர் அரங்கில் நடந்து முடிந்துள்ளது என்றும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,  நடைப்பெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் நடைப்பெறும் என கூறினார்.மேலும், 2022-ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்தார். காகிதம் இன்றி, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மூலமே இருக்கும் என கூறிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!