ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தொடக்கம்

சென்னையில் உள்ள வீராங்கல் ஓடையில் இன்று ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ‘டிரோன்’ மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன. தற்சமயம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு கொசுக்கள் இருப்பதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், முதற்கட்டமாக வீராங்கல் ஓடை, அடையாறு ஆற்றில் ‘டிரோன்’ மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

Translate »
error: Content is protected !!