பைக் நேருக்கு நேர் மோதி விபத்து- தந்தை, மகள் பலி

சிவகாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தையுடன் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகாசி மேற்குப்பகுதி ஏ. லட்சுமியாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி வெங்கடேஸ்வரி தம்பதிக்கு 3 ம் வகுப்பு படிக்கும் முத்துலட்சுமி என்ற மகளும் 2ம் வகுப்பு பயிலும் முனி பாண்டி என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பைக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கருமன் கோவில் பகுதியை சேர்ந்த ஹரிஷ் நாத்  என்பவர் வந்த பைக்கும் முருகன் வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தந்தை முருகனும் உயிரிழந்தார். தொடர்ந்து தாயும், மகனும், விபத்தில் சிக்கிய ஹரிஷ் நாத்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!