தமிழகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான ஐந்தாவது சிறப்பு முகாம் 600 இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் சனிக் கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை போலவே, வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குட்பட்ட 600 பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 160 சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Translate »
error: Content is protected !!