ஜல்லிக்கட்டு போட்டிக்கு தாயாராகும் காளைகள்

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளை உரிமையாளர்கள் காளைகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தின்  ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடைபெற உள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளை உரிமையாளர்கள் காளைகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருவளர்ச்சிபட்டியில் உள்ள காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.காளைகளுக்கு கோதுமை, பச்சரிசி, தேங்காய், ஆப்பிள், பேரிச்சம்பழ கலவை, உளுந்து, பருத்தியை அரைத்து உணவாக வழங்கப்படுவதால் காளை உடல் திடமாகவும், கால்கள் உறுதியாகவும் இருக்க உதவும் என்று காளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!