கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 7 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மறுபுறத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்களானது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!