தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பல மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை துவக்கம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 21 மாதங்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் 21 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசின் உத்தரவின்படி இரு மாநிலங்களுக்கும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தேவைக்கேற்ப 50 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!