பட்டாசு வெடித்த அ.தி.மு.க நிர்வாகியின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

 

சென்னையில் அனுமதியின்றி பொது இடத்தில் பட்டாசு வெடித்த அ.தி.மு.க நிர்வாகியின் கார் ஓட்டுநர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்த இவ்விருவரும் அதற்கான சான்றிதழை நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர். அப்போது பொது இடத்தில் அனுமதியின்றி பட்டாசு வெடித்ததற்காக காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் ஜெயராஜ் என்பவரின் கார் ஓட்டுநர் சிவகுமார் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!