பிடிபட்டது சிறுத்தை- மக்கள் நிம்மதி

மகராஷ்டிரா மாநிலம் புனேவில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சிறுத்தை பிடிபட்டது.

புனேயின் கடப்சர் பகுதியில் வசிக்கும் ஒருவர், நடைபயிற்சிக்கு சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த சிறுத்தை அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வனப்பகுதியிலிருந்து வழித்தவறி ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இரவு முழுவதும்  தீவிர தேடுதல் வேட்டை நடத்தி  பதுங்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தையை கண்காணித்து வரும் அதிகாரிகள், அதன் உடல்நிலை சீரானதும் வனப்பகுதியில் விடுவிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!