ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், அதன் பிறகு 3 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், அதனை தொடர்ந்து 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலை கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலை கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து பணியாளர்களுக்கு தெரிவிப்பதோடு, குறித்த நேரத்தில் கடைகளை திறந்து செயல்படுத்த அறிவுறுத்த மாவட்ட வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!