தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவல் குறைந்து வரும் நிலையில் உருமாறி உள்ள ஒமைக்ரான் வரை கொரோனா வைரஸ் பல்வேறுு நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 15ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது.

இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து இன்று காலை 10.30 மணி அளவில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஒமைக்ரான் வகை கொரனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!