15-18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் உள்ள பள்ளிகளிலேயே 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்,சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!