இடையூறு விளைக்கும் கேரள அரசுக்கு கண்டனம் – ஓ.பி.எஸ்.

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடையூறு விளைவிக்கும் கேரள அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரளா அரசு நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கேரளா மாநில முதலமைச்சருடன் தனக்குள்ள செல்வாக்கையும், கம்யூனிஸ்ட் கட்சியுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை நிலை நாட்டிட வேண்டுமென தமிழக முதலமைச்சரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!