புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வாழ்த்து

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் பெற்ற தமிழகம் ம்ற்றும் புதுச்சேரியை சேர்ந்த விருதாளர்களூக்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் கொங்கம்பட்டு ஏ.வி.முருகையன், தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்ரமணியம், சௌகார் ஜானகி, எஸ்.பல்லேஷ் பஜன்திரி, எஸ்.தாமோதரன், ஆர்.முத்துக்கண்ணம்மாள், ஏ.கே.சி.நடராஜன், டாக்டர் வீராசாமி சேஷையா ஆகியோருக்கும் மற்றும் இந்தியா முழுவதும்  பத்ம விருதுகள் பெருகின்ற அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்தாக தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!