கொரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.. அறிவுறுத்தல்கள் மட்டுமே – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வீடு தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பேசிய அவர், இனி வியாழன் தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றார். தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், பரவல் அதிகமாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார விதிகளின்படி, திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றார்.

Translate »
error: Content is protected !!