இந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 805 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 36 லட்சத்து 27 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,61,334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 805 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 56 ஆயிரம் 386 ஆக உயர்ந்துள்ளது. 

Translate »
error: Content is protected !!