ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று, 23,824 மாதிரிகள் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும் 217 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,67,706 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,49,555 ஆக உள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,760 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!