கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோன தொற்று

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரே நாளில் 78 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என சுகாதாரதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!