இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நேற்று 58 ஆயிரம்.. இன்று 90 ஆயிரம்..!

இந்தியாவில், நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 2,85,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 325 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 82 ஆயிரம் 876 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!