இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,862 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாடுகளாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. நேற்று முன்தினம் 15,823 பேருக்கும், நேற்று 18,987 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 33 லட்சத்து 82 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 379 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 51 ஆயிரம் 814 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!